Monday 8 August 2011

முத்தான மூன்றாவது படைப்பு


என்னோட பதிவுகளை பார்த்த மக்கள் அம்புட்டு பேரும் புகழ்ந்து தள்ளிட்டாங்க.என்னோட முதல் பதிவை போட்டப்ப இருந்ததை விட ரெண்டாவது பதிவு போடும் போது தான் எனக்கு நண்பர்கள் அதிகமா இருந்தாங்க . ரெண்டாவது பதிவு பார்க்க வந்த மக்கள் என்னோட முதல் பதிவை பார்த்து ஆச்சர்யப்பட்டுட்டாங்க. முதல் பதிவே இவளவு அருமையா யாராலையும் எழுத முடியாது அதுவும் எந்த அனுபவமும் இல்லாம இப்புடி எழுத சான்ஸ் இல்லன்னு என்னை பாராட்டி மெயில் நெறையா வந்துச்சு .அதுலயும் சில பேர் எழுத்தாளர் சுஜாதா விட்டுட்டு போன இடத்தை உங்களால மட்டும் தான் நிரப்ப முடியும்னு கொஞ்சம் அதிகப்படியா பாராட்டி இருந்தாங்க.

இப்புடி என்னை பாராட்டி வந்த மெயில்கள் அத்தனைக்கும் பதில் அனுப்பிட்டு இருந்ததால் என்னால் இத்தனை நாளா பதிவு எதுவும் எழுத முடியல என்ற வருத்தமான விஷயத்தை தெரிவித்துக் கொள்கிறேன் . இந்த மூன்றாவது பதிவு முதல் பதிவு அளவுக்கு சுவாரசியமா இருக்குமா என்பது சந்தேகமே . இனிமே நான் எத்தனை பதிவு எழுதினாலும் அது என் முதல் பதிவுக்கு ஈடாகாது .என்னோட ரசிகர்கள் அனைவரும் ரொம்ப நாளா ரெண்டு பதிவுகளையே படிச்சு படிச்சு வெக்ஸ் ஆகிவிட்டதால் இதோ என்னுடைய மூன்றாவது பதிவு ....

L .K .G , U .K .Gல முன்னப்பின்ன படிச்சாலும் I Std   வந்தோன நல்லா படிக்க ஆரம்பிச்சுட்டேன் .அதுக்கு காரணம் I Stdல இருந்த மிஸ்  . கிளாஸ்ல யாரு அடிச்சாலும் மிஸ்ட்ட சொல்லாம அடுத்த நாள் வீட்ல இருந்து ஆள் கூட்டிட்டு வந்து அடிச்ச புள்ளைங்களுக்கு அடி வாங்கி கொடுப்பேன். இப்புடி அடி வாங்குன ஒரு பொண்ணு மிஸ்ட்ட மாட்டி விட்ருச்சு .உடனே மிஸ் என்னை பார்த்து ஒழுங்கா படிக்க வக்கு இல்லதா மக்கு .... நீ வீட்ல இருந்து ஆள் கூட்டிட்டு வந்து மெரட்டுரியானு கும்மு கும்ம்னு கும்மிட்டாங்க. ஏதோ அந்த வயசுல கொஞ்சம் ரோசம் வந்து நல்லா படிக்கணும்னு ஒரு வைராக்கியத்த மனசுல வச்சுக்கிட்டு நல்லா படிக்க ஆரம்பிச்சேன். அடுத்த Midtermலையே 2nd ரேங்க் வாங்கிட்டேன்.

இப்புடி ஒரு வழியா II Std போனேன் . I Stdல இருந்தத விட Maths கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. Maths மிஸ் வேற ரொம்ப கோவக்காரவுங்களா இருந்தாங்க. கொஞ்சம் கொஞ்சமா பிக் அப் பண்ணிட்டு இருந்தேன்.இப்புடி II Stdல கால் வச்சு ரெண்டு மாசத்துல தான் என் வாழ்நாளில் மறக்க முடியாத அந்த சம்பவம் நடந்துச்சு.

அந்த மிஸ் எப்பவுமே ஒரு கணக்கை நடத்திட்டு அதே மாடல்ல  உள்ள கணக்கை கொடுத்து செய்ய சொல்லிட்டு போய் Chairல உட்கார்ந்து லைட்டா கண் அசருவாங்க. நாங்க பக்கத்தில் இருப்பவருடன் டிஸ்கஸ் பண்ணி கணக்கை போடுவோம் . நாங்க டிஸ்கஸ் பண்ணும் போது சத்தம் அதிகம் கேட்டா அந்த மிஸ் ஸ்கேல் எடுத்து  டேபுள்ள ரெண்டு தட்டு தட்டி ஏய்னு ஒரு சவுண்டு விடுவாங்க.

இப்புடி ஒரு நாள் மதிய நேரம் வழக்கம் போல எங்களை கணக்க போட சொல்லிட்டு போய் கண் அயர்ந்தாங்க மிஸ். ஒரு நாளும் இல்லாத திருநாளா அன்னக்கின்னு பார்த்து நான் முதல் ஆளா கணக்கை போட்டு முடுச்சுட்டேன்.சரி மிஸ்ட்ட கொண்டு போய் காட்டலாம்னு நோட்ட எடுத்துட்டு போனேன். மிஸ் மிஸ்னு நாலஞ்சு முறை கூப்பிட்டேன் . மிஸ் கண்ண மூடி அப்புடியே உட்கார்ந்து இருந்தாங்க. நாம முதல் ஆளா கணக்கை முடிச்ச நாள் அதுவுமா மிஸ் இப்புடி தூங்குராங்கலேன்னு எனக்கு கடுப்பா இருந்தது. ரொம்ப நேரமா கூப்பிட்டும் எழும்பாததால் ஒரு வித சந்தேகம் வந்துடுச்சு எனக்கு . அப்புறம் கிளாஸ்ல இருந்த எல்லாரும் கூப்பிட்டு பார்த்தோம் .

 எங்க மனசுல ஒரு வித பயம் வரவும் நான் போய் பக்கத்து கிளாஸ்ல இருக்குற மிஸ்சை கூட்டிட்டு வந்தேன்.அவுங்க மிஸ் பேர சொல்லிக் கூப்பிட்டுக்கிட்டே மிஸ் மேல கை வச்சாங்க தலை சொய்யுனு சாஞ்சுடுச்சு. அந்த மிஸ் வேகமா போய் ஹெச்.எம்ம கூட்டிட்டு வந்தாங்க. அவுங்க பல்ஸ் செக் பண்ணி பார்த்துட்டு அழ  ஆரம்பிச்சுடாங்க. அதை பார்த்த நாங்களும் என்னா நடக்குதுனே தெரியாம கோரஸா அழ  ஆரம்பிச்சுட்டோம் .எங்க எல்லாத்தையும் கிளாஸ  விட்டு வெளிய போக சொல்லிட்டு அவுங்கள ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனாங்க. அவுங்க heart attack வந்து இறந்துட்டதை அங்க confirm பண்ணிடாங்க . எங்களுக்கெல்லாம் கண்ணு முன்னால மிஸ் இறந்து போனது பயமாவும் கவலையாவும் இருந்துச்சு. 

நான் நல்லக் காலத்துலேயே பயங்கர தைரியசாலி இதை வேற பார்த்துட்டேன் அப்புறம் என்னா , காய்ச்சல் வந்து ஒரு வாரம் ஸ்கூல் சைடே போகல . நான் படுச்சது கிறிஸ்டியன் ஸ்கூல் என்பதால் பாதரை கூட்டிட்டு வந்து மாஸ் நடத்தி வேளாங்கன்னில இருந்து தீர்த்தம் கொண்டு வந்து கிளாஸ்ல  தெளிச்சு விட்டாங்க.அப்புறம் தான் அந்த கிளாஸ்குள்ள போனோம். இது மாதிரி அனுபவம் வேற யாருக்கும்  இருக்குமான்னு தெரியல எனக்கு. மனதுக்கு கஷ்டமான மறக்க முடியாத நினைவுகளில் இதுவும் ஒன்று ...