Friday 27 January 2012

அறுந்த வாலுவின் கதை !

நானே ப்ளாக் எழுதுறத விட்டுடலாம்னு பார்த்தா கூட ட்விட்டர்ல உள்ள மக்கள் ரொம்ப ஆர்வமா அடுத்த பதிவு எப்ப வெளியுடுரீங்கனு ரொம்ப ஆர்வமா கேட்குறாங்க. அப்படி ஆர்வமா கேட்ட மக்களுக்காக நான் ப்ளாக் எழுத வேண்டிய நிலைமை .மறுபடியும் என்னோட கதைக்கே போவோம் .

 நான் இப்பவே இவ்ளோ வாலா இருக்கேன்னா ? அப்போ எவ்ளோ பெரிய வாலா இருந்துப்பேன்னு பார்த்துக்கோங்க . யார்ப் பேச்சையுமே கேட்க மாட்டேன் அப்புடியே ஜாலியா இருப்பேன் . வீட்ல உள்ளப் பொருளை எல்லாம் உடைச்சுட்டு அப்புடியே நல்லப் பிள்ளை மாதிரி உட்கார்ந்துக்குவேன். எப்புடி இருந்தாலும் எங்கம்மா கண்டுப் பிடிச்சுடுவாங்க .சில சமயம் என் தம்பி தங்கச்சி உடைக்கிரதியும் நான் தான் உடைச்சேன்னு நெனச்சு அடிப்பாங்க. என்னப் பண்றது பெரியவா வாழ்க்கைல இதெல்லாம் சகஜம் தானே .

சுட்டியா இருந்தாலும் படிப்புல கெட்டி நான். சில சமயம் என்னோட விளையாட்டுத் தனத்தால மார்க் குறைஞ்சுடும்.எப்பவும் அம்மாட்ட தான் ரேங்க் கார்ட்ல சைன் வாங்குவேன் ... மார்க் குறையும் போது மட்டும் எனக்கு அதிகம் செல்லம் கொடுக்குற அப்பாட்ட சைன் வாங்கிடுவேன் . எப்புடியும் அம்மாவுக்கு தெரிஞ்சுப் போய்டும் . ரெண்டுப் பேரும் நல்லா திட்டு வாங்குவோம் அம்மாட்ட .

அம்மா திட்டுவாங்க , அடிப்பாங்கான்றதால அவங்களுக்கு மட்டும் கொஞ்சம் பயப்படும் எனக்கு வீட்ல பாக்கெட் மணியே கொடுக்க மாட்டாங்க ...ஸ்நாக்ஸ்லாம் வீட்ல இருந்தே கொடுத்து அனுப்பிடுவாங்க. எனக்கோ கான்டீன்ல விற்கிரத வாங்கி சாப்பிடறதுல தான் ஆசை ... வேற வழி ? ... வீட்ல இருந்து காசை ஆட்டேப் போட்ருவேன்.காசை எடுத்தியான்னு அம்மா கேட்டா எடுக்கவே இல்லன்னு சாமி மேலேயே பொய் சத்தியம் பண்ணுவேன் . பொய் சத்தியம் பண்ணுனா அது பண்ணும் இது பண்ணும்னு அம்மா என் காதுல விழுற மாதிரி யார்ட்டயாது சொல்லி எனக்கு பீதியக் கெளப்புவாங்க . அப்புறம் என்ன ... தனியா போய் சாமிக்கிட்ட இது தான் கடைசி முறை இனிமே சத்தியமா இப்புடி பொய் சத்தியம் பண்ண மாட்டேன்னு சொல்லி மன்னிப்புக் கேட்பேன். அப்புறம் எப்பவும் போல தான் ...

எனக்கு சின்ன வயசுலேயே நாம மட்டும் தான் ஜெயிக்கணும் , நம்ம பேச்ச மட்டும் தான் எல்லாரும் கேட்கனும் என்ற உயரிய கொள்கை இருந்துச்சு . விளையாட்டுல கூட யாரும் ஜெயிக்கக் கூடாது , ஜெயிச்சவுங்கள போட்டு அடி வெளுத்துப்புடுவேன்.இதுனாலேயே என்னைய யாரும் விளையாட்டுக்கு சேர்த்துக்க மாட்டாங்க . அப்புறம் எதாவுது பேசி சரி பண்ணிடுவேன் .என்ட்ட அடிவாங்குனவுங்க அவுங்க அம்மாவ கூட்டிட்டு வந்து எங்கம்மாட்ட நியாயம் கேட்ப்பாங்க.எங்கம்மா என்ன பண்ணுவாங்க ??? வழக்கம் போல அடிப்பாங்க என்னை . அதுகெல்லாம் அசர்ர ஆளா நான் .

நான் ஒரு நான் வெஜ் பிரியை சின்னதுல இருந்தே .ஒரு நாள் எங்கம்மா சிக்கன் கிரேவி வச்சுட்டு கொஞ்சம் நேரம் கழிச்சு சாப்பிடுவோம்னு போய் கண் அசந்துட்டாங்க .எங்க வீட்ல வேற காரச்சாரமா சமைப்பாங்க ...  சின்னப் பிள்ளைன்றதால அப்ப அது கொஞ்சம் கஷ்ட்டமா இருந்துச்சு .அதுனால சிக்கன் பீசை எடுத்து குடிக்க வச்சுருந்த ஜலத்துல அலம்பி அப்புடியே வாய்ல போட்டுக்கிட்டேன் . இப்புடியே எல்லா சிக்கன் பீசையும் காலிப் பண்ணி , மொத்த கிரேவியையும் தண்ணில கழுவியாச்சு. அப்புறம் வழக்கம் போல விளையாட கெளம்பிட்டேன் .

அன்னைக்குன்னு பார்த்து ஒரு பையன வேற அடிச்சு , அவன் நெத்தில காப்பித் தூள் வச்சு அனுப்பி இருந்தேன் . அவுங்க அம்மாவோட வந்து அந்த பையன் நியாயம் கேட்ருக்கான். எங்கம்மாவுக்கு என் மேல சரியான கோபம் .என்னை  தர தரன்னு இழுத்துக்கிட்டு வந்து "காலைல இருந்து இன்னும் குளிக்கக் கூட இல்ல , ரவுடியாட்டம் அலைஞ்சுக்கிட்டு ஊர் வம்ப வேற இழுத்துட்டு வர்றியானு " கேட்டுட்டு இருந்தப்ப தான் தண்ணியப் பார்த்தாங்க... அப்புறம்  என்ன ??? அந்த சிக்கன் கிரேவி கலந்த  தண்ணிலேயே குளிப்பாட்டி விட்டுட்டாங்க... அதுக்கப்புறம் கொஞ்சம் சேட்டை எல்லாம் குறைத்துக் கிட்டேன் .இது மாதிரி நெறைய சோதனைகளை தாண்டி வந்துருக்கேன் நான் :(


















Thursday 15 September 2011

நச்சென்ற நாலாவது படைப்பு !!!

பிம்ப்ளிக்க்க்க்க்காகாகாகாகா பிளாப்பி (:-)

எல்லாரும் ஆர்வமா வந்தீங்களா என்னோட நாளாவுது பதிவை படிக்க ... எனக்கு ஆபீஸ்ல நெறைய வேலை (!) இருந்தது ... அதனால எழுத முடியலை ... அடுத்த முறை கண்டிப்பா  இப்புடிலாம் விளையாட மாட்டேன் .... எழுதும் போது ட்விட்டர்ல அறிவிக்கிறேன் ... அப்ப வாங்க ராஜாக்களா !!!




Monday 8 August 2011

முத்தான மூன்றாவது படைப்பு


என்னோட பதிவுகளை பார்த்த மக்கள் அம்புட்டு பேரும் புகழ்ந்து தள்ளிட்டாங்க.என்னோட முதல் பதிவை போட்டப்ப இருந்ததை விட ரெண்டாவது பதிவு போடும் போது தான் எனக்கு நண்பர்கள் அதிகமா இருந்தாங்க . ரெண்டாவது பதிவு பார்க்க வந்த மக்கள் என்னோட முதல் பதிவை பார்த்து ஆச்சர்யப்பட்டுட்டாங்க. முதல் பதிவே இவளவு அருமையா யாராலையும் எழுத முடியாது அதுவும் எந்த அனுபவமும் இல்லாம இப்புடி எழுத சான்ஸ் இல்லன்னு என்னை பாராட்டி மெயில் நெறையா வந்துச்சு .அதுலயும் சில பேர் எழுத்தாளர் சுஜாதா விட்டுட்டு போன இடத்தை உங்களால மட்டும் தான் நிரப்ப முடியும்னு கொஞ்சம் அதிகப்படியா பாராட்டி இருந்தாங்க.

இப்புடி என்னை பாராட்டி வந்த மெயில்கள் அத்தனைக்கும் பதில் அனுப்பிட்டு இருந்ததால் என்னால் இத்தனை நாளா பதிவு எதுவும் எழுத முடியல என்ற வருத்தமான விஷயத்தை தெரிவித்துக் கொள்கிறேன் . இந்த மூன்றாவது பதிவு முதல் பதிவு அளவுக்கு சுவாரசியமா இருக்குமா என்பது சந்தேகமே . இனிமே நான் எத்தனை பதிவு எழுதினாலும் அது என் முதல் பதிவுக்கு ஈடாகாது .என்னோட ரசிகர்கள் அனைவரும் ரொம்ப நாளா ரெண்டு பதிவுகளையே படிச்சு படிச்சு வெக்ஸ் ஆகிவிட்டதால் இதோ என்னுடைய மூன்றாவது பதிவு ....

L .K .G , U .K .Gல முன்னப்பின்ன படிச்சாலும் I Std   வந்தோன நல்லா படிக்க ஆரம்பிச்சுட்டேன் .அதுக்கு காரணம் I Stdல இருந்த மிஸ்  . கிளாஸ்ல யாரு அடிச்சாலும் மிஸ்ட்ட சொல்லாம அடுத்த நாள் வீட்ல இருந்து ஆள் கூட்டிட்டு வந்து அடிச்ச புள்ளைங்களுக்கு அடி வாங்கி கொடுப்பேன். இப்புடி அடி வாங்குன ஒரு பொண்ணு மிஸ்ட்ட மாட்டி விட்ருச்சு .உடனே மிஸ் என்னை பார்த்து ஒழுங்கா படிக்க வக்கு இல்லதா மக்கு .... நீ வீட்ல இருந்து ஆள் கூட்டிட்டு வந்து மெரட்டுரியானு கும்மு கும்ம்னு கும்மிட்டாங்க. ஏதோ அந்த வயசுல கொஞ்சம் ரோசம் வந்து நல்லா படிக்கணும்னு ஒரு வைராக்கியத்த மனசுல வச்சுக்கிட்டு நல்லா படிக்க ஆரம்பிச்சேன். அடுத்த Midtermலையே 2nd ரேங்க் வாங்கிட்டேன்.

இப்புடி ஒரு வழியா II Std போனேன் . I Stdல இருந்தத விட Maths கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. Maths மிஸ் வேற ரொம்ப கோவக்காரவுங்களா இருந்தாங்க. கொஞ்சம் கொஞ்சமா பிக் அப் பண்ணிட்டு இருந்தேன்.இப்புடி II Stdல கால் வச்சு ரெண்டு மாசத்துல தான் என் வாழ்நாளில் மறக்க முடியாத அந்த சம்பவம் நடந்துச்சு.

அந்த மிஸ் எப்பவுமே ஒரு கணக்கை நடத்திட்டு அதே மாடல்ல  உள்ள கணக்கை கொடுத்து செய்ய சொல்லிட்டு போய் Chairல உட்கார்ந்து லைட்டா கண் அசருவாங்க. நாங்க பக்கத்தில் இருப்பவருடன் டிஸ்கஸ் பண்ணி கணக்கை போடுவோம் . நாங்க டிஸ்கஸ் பண்ணும் போது சத்தம் அதிகம் கேட்டா அந்த மிஸ் ஸ்கேல் எடுத்து  டேபுள்ள ரெண்டு தட்டு தட்டி ஏய்னு ஒரு சவுண்டு விடுவாங்க.

இப்புடி ஒரு நாள் மதிய நேரம் வழக்கம் போல எங்களை கணக்க போட சொல்லிட்டு போய் கண் அயர்ந்தாங்க மிஸ். ஒரு நாளும் இல்லாத திருநாளா அன்னக்கின்னு பார்த்து நான் முதல் ஆளா கணக்கை போட்டு முடுச்சுட்டேன்.சரி மிஸ்ட்ட கொண்டு போய் காட்டலாம்னு நோட்ட எடுத்துட்டு போனேன். மிஸ் மிஸ்னு நாலஞ்சு முறை கூப்பிட்டேன் . மிஸ் கண்ண மூடி அப்புடியே உட்கார்ந்து இருந்தாங்க. நாம முதல் ஆளா கணக்கை முடிச்ச நாள் அதுவுமா மிஸ் இப்புடி தூங்குராங்கலேன்னு எனக்கு கடுப்பா இருந்தது. ரொம்ப நேரமா கூப்பிட்டும் எழும்பாததால் ஒரு வித சந்தேகம் வந்துடுச்சு எனக்கு . அப்புறம் கிளாஸ்ல இருந்த எல்லாரும் கூப்பிட்டு பார்த்தோம் .

 எங்க மனசுல ஒரு வித பயம் வரவும் நான் போய் பக்கத்து கிளாஸ்ல இருக்குற மிஸ்சை கூட்டிட்டு வந்தேன்.அவுங்க மிஸ் பேர சொல்லிக் கூப்பிட்டுக்கிட்டே மிஸ் மேல கை வச்சாங்க தலை சொய்யுனு சாஞ்சுடுச்சு. அந்த மிஸ் வேகமா போய் ஹெச்.எம்ம கூட்டிட்டு வந்தாங்க. அவுங்க பல்ஸ் செக் பண்ணி பார்த்துட்டு அழ  ஆரம்பிச்சுடாங்க. அதை பார்த்த நாங்களும் என்னா நடக்குதுனே தெரியாம கோரஸா அழ  ஆரம்பிச்சுட்டோம் .எங்க எல்லாத்தையும் கிளாஸ  விட்டு வெளிய போக சொல்லிட்டு அவுங்கள ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனாங்க. அவுங்க heart attack வந்து இறந்துட்டதை அங்க confirm பண்ணிடாங்க . எங்களுக்கெல்லாம் கண்ணு முன்னால மிஸ் இறந்து போனது பயமாவும் கவலையாவும் இருந்துச்சு. 

நான் நல்லக் காலத்துலேயே பயங்கர தைரியசாலி இதை வேற பார்த்துட்டேன் அப்புறம் என்னா , காய்ச்சல் வந்து ஒரு வாரம் ஸ்கூல் சைடே போகல . நான் படுச்சது கிறிஸ்டியன் ஸ்கூல் என்பதால் பாதரை கூட்டிட்டு வந்து மாஸ் நடத்தி வேளாங்கன்னில இருந்து தீர்த்தம் கொண்டு வந்து கிளாஸ்ல  தெளிச்சு விட்டாங்க.அப்புறம் தான் அந்த கிளாஸ்குள்ள போனோம். இது மாதிரி அனுபவம் வேற யாருக்கும்  இருக்குமான்னு தெரியல எனக்கு. மனதுக்கு கஷ்டமான மறக்க முடியாத நினைவுகளில் இதுவும் ஒன்று ...





Wednesday 15 June 2011

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே !!!

 

ஏதோ ஒரு ஆசையில் blog  create பண்ணிட்டேன் . ஒரு ஹாய் சொல்லி பிள்ளையார் சுழியும் போட்டாச்சு. அத அப்புடியே விட்டுடலாம்னு பாத்தா என்னை நம்பி 3  followers . நம்ம நண்பர் சந்தோஷ்வேற ஊரே தம்பட்டம் அடிச்சிட்டார் நான் blog  create பண்ணி வெறும் ஹாய் போட்டு வச்சுருக்க விஷயத்தை . அந்த வகைல நெறைய மக்கள் என் ப்ளாக்க பார்க்க  ஒரே போட்டி .

சரி நம்மள நம்பி வர்ற மக்களை ஏமாத்த வேண்டாமேனு  ஏதாவது ஒரு கருமத்தை எழுதுவோம்னு முடிவுப்பண்ணி நேத்து நைட் உட்காந்தேன் .ஒரு கன்றாவியும் மூளைல தோணல. சரி எதுக்கும் மற்றவர்களுடைய ப்ளாக்க   வேடிக்கை பாத்துட்டு வரலாம்னு ஒவ்வொன்னா பார்க்க ஆரம்பிச்சேன் .அப்ப தான் தெரிஞ்சது நம்ம எவளவு பெரிய ரிஸ்க் எடுத்திருக்கோம்னு.  

 ஒவ்வொரு ஜாம்பவானும் பயங்கரமா எழுதி இருந்தாங்க . நாம அந்த அளவுக்கு வொர்த் இல்லையேன்னு ஒரு சின்ன நடுக்கம் மனசுல  வந்துடுச்சு .கவிதை கன்றாவி எல்லாம் நமக்கு வராதேனு ஒரு சின்ன பயம் .
  
இருந்தாலும் என்னை follow பண்ற 3  பேரை நெனச்சு பாத்தேன் .வெறும் ஹாய்கே    follow பண்ற அந்த நல்ல உள்ளங்களை ஏமாத்த கூடாதுன்னு நெனச்சேன் . சரி கடைசியா ஒரு ப்ளாக்க பாத்துட்டு போய் படுப்போம்னு குழந்த ப்ளாக்க பாத்தேன் .அப்ப தான் எனக்கு ஒரு நம்பிக்கையே வந்துச்சு .பயபுள்ள நம்பள மாதிரி தான் ஒன்னும் தெரியாமதான் ஆரம்பிச்சு இருக்கின்ற விவரம். (சும்மா சொன்னேன் உண்மையாவே நல்லா இருக்கும் ). அப்புறம் போய் டிவிய பாத்தேன் .இஸ்கூல் நாளைக்கு (இன்னைக்கு) ஆரம்பிக்கிறதா நியூஸ் போட்டாங்க. அப்ப தான்  எனக்கு முதல் முதலா நான் இஸ்கூல் போன ஞாபகம் வந்துடுச்சு .


ஒ.கே நம்ம அத பத்தியே   எழுதுவோம்னு நெனைச்சா    நள்ளிரவு 12  மணி ஆய்டுச்சு . சும்மாவே நம்ம பயந்த சுபாவம்  ,இதுல அப்ப தான் minimeens DPய பாத்தேன் .சரி  கெளம்புவோம்னு கெளம்பிட்டேன் படுக்க.  

இன்னைக்கு காலைல முதல் வேலையா உட்காந்து எழுத ஆரம்பிச்சுட்டேன் . இப்ப flash  backகு போவோம் . அப்புடியே ஜாலியா சுத்திக்கிட்டு இருந்த என்னைய கொண்டு போய் இஸ்கூல்ல சேத்தாங்க. நான் ஒரே அழுகை .அப்பா தான் இஸ்கூல்ல கொண்டு போய் விட வந்தார் .நான் விடாம அழுது முதல் நாளே அவர் கூடயே வீட்டுக்கு வந்துட்டேன். அம்மா வீட்ல வச்சு வெளு வெளுனு வெளுத்துட்டாங்க .

அப்புறம் அடுத்த நாள் மறுபடியும் கொண்டு போய் விட்டாங்க. முதல் நாள் விழுந்த அடி ஞாபகம் இருந்ததால் பேசாம , நம்ம விதி இது தான்னு நெனைச்சுக்கிட்டு இஸ்கூல்போயிட்டேன் .அங்க போனா எனக்கு மேல எல்லா பக்கிகளும் அழுதுக்கிட்டு இருக்குங்க . நானும் அதுங்க ஜோதில ஐக்கியம் ஆய்ட்டேன்.

ஒரு பத்து நாள் ஒண்ணுமே நடத்தல சரி சும்மா தானே வர்றோம்னு நானும் ஜாலியா வர ஆரம்பிச்சுட்டேன் .  அப்ப தான் விதி A , B , C , D  ரூபத்துல  வந்துச்சு .அதுக்கு அப்புறம் எனக்கு வாழ்க்கையே வெறுத்து போச்சு .எவளவு கஷ்டப்பட்டு மனப்பாடம் பண்ணினாலும் மனப்பாடம் ஆகவில்லை .அதுல வேற ஆர்டர்ஆ எழுதலைன்னு மிஸ் ஒரு பிடி பிடுச்சுட்டாங்க .

என்னடா பண்றதுன்னு யோசிச்சுக்கிட்டு இருந்தப்ப தான் சிலேட்ட (slate) தொலைச்சுட்டேன்னு புதுசு வாங்க கூட்டிட்டு போனாங்க. அப்ப தான் நான் கவனிச்சேன் ஒரு சிலேட்ல A , B , C , D எழுதி இருந்தத (அப்பவே கிரிமினல் புத்தி ) . அப்பாக்கிட்ட அடம் பிடுச்சு அந்த சிலேட் வாங்கினேன் .

அதுக்கப்புறம் சும்மா மிஸ்யே ஆச்சர்யப்படற அளவுக்கு நடந்துக்கிட்டேன் .அப்ப தான் விதி மறுபடியும் என் வாழ்க்கைல விளையாட ஆரம்பிச்சு. மிஸ் ஒரு நாள் நோட் குடுத்து எழுத சொன்னாங்க .பெக்க பெக்கன்னு முழிக்க ஆரம்பிச்சுட்டேன் .அப்புறம் தான் அந்தஅம்மாக்கு வெவரமே புரிந்தது. செம்ம அடி விழுந்தது .அதுக்கு அப்புறம் அந்தம்மா எப்பவுமே என்னைய ஒரு கிரிமினல பாக்கிற மாதிரியே பாக்கும். நான் A , B , C , D  (& ,, ) கத்துக்கறதுக்குள்ள முழி பிதிங்கிடுச்சு. உண்மையாவே அந்த வயசுல அது ஒரு பெரிய கஷ்டமா இருந்தது . 

இது L .K .Gல நான் அனுபவித்த வேதனை  (:-(